திங்கள், 22 நவம்பர், 2010

என் உயிரே

என் உயிரே உன்னுள் உயிர் வாழ விரும்புகிறேன்
உன் கண்ணுக்குள் பார்வையாக
உன் இதழ்தனில் உச்சரிப்பாக
உன் உறக்கத்தில் கணவாக
உன் உதிரத்தில் உயிரோட்டமாக
இருக்க ஆசைபடுகிறேன்
என்றும் எப்பொழுதுமே
நீயாய் நான் நானாய் நீ
                              காதலுடன
                            கவிதைவித்யா

வியாழன், 4 நவம்பர், 2010

காதல் அனாதையாய்

ஊன்றுகோல் இல்லாமல் என்னால்
இருக்க முடியுமா? முடவனாய்!
கண்கள் இல்லாமல் என்னால்
இருக்க முடியுமா? குருடனாய்!
பேச்சு இல்லாமல் என்னால்
இருக்க முடியுமா? ஊமையாய்!
உன் காதல் இல்லாமல் என்னால்
இருக்க முடியுமா? அனாதையாய்!
                       
                               காதலுடன் 
                          கவிதை வித்யா
 அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்

செவ்வாய், 2 நவம்பர், 2010

கண்ணீர் அஞ்சலி

                                                        கண்ணீர் அஞ்சலி
                           கோவையில் கடத்தி கொலை செய்யப்பட்டு இறந்த முஸ்கன்,ரித்திக்கின்  பிஞ்சு
இதயங்களின் ஆண்மா சந்தியடைய கண்ணீர் அஞ்சலி
  கணவுகளுடன் வாழ துடித்த இந்த பிஞ்சு இதயங்களை
கொண்றவர்கள் நீதியின் முன் நிறுத்தி தக்க தண்டனை
பெறவேண்டும் கடவுளே                 
                                                                    கண்ணீருடன்
                                                                   கவிதை வித்யா. 

வெள்ளி, 29 அக்டோபர், 2010

எதனாலும் பிரியக்கூடாது

அன்பால் வந்தது நம் காதல்
 அது கோபத்தால் பிரியக்கூடாது
பாசத்தால் வந்தது நம் காதல்
அது பணத்தால் பிரியக்கூடாது
மனசால் வந்தது நம் காதல்
அது பேச்சால் பிரியக்கூடாது
உறவால் வந்தது நம் காதல்
அது உறவினரால் பிரியக்கூடாது
                                       
                       காதலுடன்
                கவிதை வித்யா

செவ்வாய், 26 அக்டோபர், 2010

காயமானதில்லை

வண்டுகள் மோதி எந்த மலரும்
                காயமானதில்லை!
மேகங்கள் மோதி அந்த வானம்
               காயமானதில்லை!
அலைகள் மோதி பாறைகள்
               காயமானதில்லை!
பனித்துளி மோதி புற்கள்
               காயமானதில்லை!
     ஆனால்
உன் விழிகள் மோதி என்
   இதயத்தில் காயம்!

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

உயிரே உன்னை ரசிப்பேன்

பரந்து விரிந்த வானத்தை ரசிப்பேன்
தென்றல்தனில் அசையும் மரத்தையும் ரசிப்பேன்
வண்டு மொய்க்கும் மலரையும்  ரசிப்பேன்
அலைந்து விளையாடும் கடலையும் ரசிப்பேன்
பறந்து திரியும் பறவையும் ரசிப்பேன்
இரவில் உலா வரும் நிலவையும் ரசிப்பேன்
இனிய கரு மேகத்தை ரசிப்பேன்
அன்பே உன் இதழை ரசிப்பேன்
உன் விழிகளை ரசிப்பேன்
என் உயிரே நான் உன்னையோ அல்லது
இயற்கையையோ ரசிக்கவில்லை இறைவன்
படைத்த அழகினைத்தான் ரசித்தேன்.

                          
                                                      காதலுடன்
                                                   கவிதை வித்யா      

சனி, 23 அக்டோபர், 2010

உண்மைகள் யாருக்கும் தெரியாது

மழை பிறப்பது மண்ணுக்குத் தெரியாது
நிலா பிறப்பது வானத்திற்கு தெரியாது
நீர் பெருகுவது கடலுக்கு தெரியாது
நான் தான் பிறப்பேன் என்று என்
       அன்னைக்கு தெரியாது
தான் நல்லவனா கெட்டவனா என்று
     சிறு பிள்ளைக்கு தெரியாது
இதழ் சிரிப்பது இதயத்திற்கு தெரியாது
மனம் அழுவது சில மனிதர்களுக்கு தெரியாது
மரம் வளர்வது தாங்கும் வேர்களுக்கு தெரியாது
இதயம் கரைவது இளைஞருக்கு தெரியாது
காதலில் எத்தனை விழிகள் என
              காதலர்களுக்கே தெரியாது
எறும்பு கடக்கும் பாதைகள் எறும்புக்கே தெரியாது
ஊமைகளுள் உழலும் உண்மைகள்
                 எவருக்குமே தெரியாது

புதன், 13 அக்டோபர், 2010

அண்பே நீ
மழையாய் பொழிந்திருந்தால்
மண்ணாக ஏந்தியிருப்பேன்
மலராய் பூத்திருந்தால்
காம்பாய் தாங்கியிருப்பேன்
கடலலையாய் அடித்திருந்தால்
கரையாய் தாங்கியிருப்பேன்
நிலவாய் நீயிருந்தால்
நித்தமும் கரைந்திருப்பேன் ஆனால்
நீ என் உயிராய் பிறந்துவிட்டாய்
என்றும் உனக்காகவே என்
உயிர் தாங்கியிருப்பேன்.

செவ்வாய், 12 அக்டோபர், 2010

காதலியே

நான் மெழுகு அல்ல உருகிவிட
நான் மரம் அல்ல சாய்ந்துவிட
நான் பூக்கள் அல்ல வாடிவிட
நான் நெருப்பூ அல்ல அனைந்துவிட
நான் ஆறு அல்ல வற்றிவிட
நான் பனிக்கட்டி அல்ல நீராகிவிட
என் மணம் கல்லும் அல்ல
உன்னை மறந்துவிட!

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

கள்ளியா கடவுளா

கள்ளியே நீ கருவை சுமக்காமலே  தாயாய் ஜனித்தாயோ!
பெண் சிசுவுக்கு பாலூட்ட.......
கருவை சுமந்த தாய் வெறுத்த சிசுவை
   அறவனைத்து பாலூட்ட....
காலனின் கரங்களை தழுவினாயோ
கடலில் நீர் வற்றினாலும் கள்ளியே
 உன்னிடம் பால் வற்றாதோ!
எத்தனை பெறிய பொறுப்பு உனக்கு
இவ்வுலகில் ஜனிக்கும் சில பெண்
 சிசுவுக்கு நீ தானே பாலூட்டி வழியனுப்புகிறாய்
பெண் சிசுவின் இதயத்தை வெடிக்கச்
 செய்யும் உனக்கு இரக்கமில்லையோ!
போதும் நீ பாலூட்டியது இதோ என் வேண்டுகோள்
போதும் நீ பெண் சிசுக்களை பலி வாங்கியது
இனியும் உனக்கு தாரை வார்க்க தயாரில்லை
 கடவுளே எனக்கு ஓரு வரம் தாராய
பெற்றவள் மனதில் ஈரம் கொட!
கள்ளியினத்தை அழித்து விடு.....
நெஞ்சினை நிறைக்கும் நெல்மணியே
பெண் சிசுவின் பிஞ்சு நெஞ்சினை
  தான் குத்தி கிழிக்கலாமோ
போதும் நீ கிழித்தது நிறுத்திக் கொள்
இனி பெண் குழந்தைகள் வாழட்டும!
     பெண் தெய்வங்களாக....கள்ளியினம் அழியட்டும்!!
  இன்றைய பாடல் லிங்க்
தாஜ் மஹால் தேவையில்லை

சனி, 18 செப்டம்பர், 2010

காதலியின் கல்லறை


பனிக்காற்று வீசும் மண் முகடு ஓன்றில்
சிறிதாய் தோண்டப்பட்ட மண் புதைகுழியினுள்
என் மனம் மகிழும் வண்ணத்தில்
என் கணவுகளை காணல்நீராக்கிவிட்டு
பவ்யமாய் உறங்குகிறது
என் விரல் மீட்டாத வீனை


    

திங்கள், 6 செப்டம்பர், 2010

mp3 songs download

எனக்கு பிடித்த பாடல்கள் இனி உங்களுக்கும்
 மின்னலே நீ
புதுவெள்ளை மழை
என் காதலே
அஞ்சலி அஞ்சலி
செந்தமிழ்
வெண்ணிலாவின்

இன்றைய புகைபடம்
download
எனக்கு பிடித்த பாடல்கள்
download

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

உறவாய் நீ

இன்முகமாய் கிடைத்த தாலிக்கொடி உறவு
    அன்பும் அறவணைப்பும நிறைந்த
                         அற்புத உலகம்
படிப்படியாய் சுமைகளை சுமந்த பின்
 அற்புதமாய் இறைவன் தந்த வரம்
  அழகிய சிசுவின் குடியேற்றம் கருவறையில்
ரசித்து ரசித்து சுமந்த அழகி. உறவு
 என் கணவுகள் நிஜமாய் என் கைகளில்
 அந்த ஓருகனம் உலகமே தன்னுடையது
. போல் ஓரு உணர்வு
 தாய் என்ற உன்னதத்தை தந்த
            அழகு தெய்வம் நீ
அன்று அவனுடன் சேர்ந்து நானும் பிறந்தேன்
  இன்று அவனுடன் சேர்ந்து நானும் வளர்கிறேன்
 செல்லமே உன்னுடைய ஓவ்வொரு
           அசைவுகளுக்கும் நான் உனது
                                                                            முதல் ரசிகை 

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

வரம்

                                        இரண்டு வருட தவத்தில் இறைவன்
                                                இறைவன் கொடுத்த அற்புத வரம்
                                                                                    என் சிசு