மழை பிறப்பது மண்ணுக்குத் தெரியாது
நிலா பிறப்பது வானத்திற்கு தெரியாது
நீர் பெருகுவது கடலுக்கு தெரியாது
நான் தான் பிறப்பேன் என்று என்
அன்னைக்கு தெரியாது
தான் நல்லவனா கெட்டவனா என்று
சிறு பிள்ளைக்கு தெரியாது
இதழ் சிரிப்பது இதயத்திற்கு தெரியாது
மனம் அழுவது சில மனிதர்களுக்கு தெரியாது
மரம் வளர்வது தாங்கும் வேர்களுக்கு தெரியாது
இதயம் கரைவது இளைஞருக்கு தெரியாது
காதலில் எத்தனை விழிகள் என
காதலர்களுக்கே தெரியாது
எறும்பு கடக்கும் பாதைகள் எறும்புக்கே தெரியாது
ஊமைகளுள் உழலும் உண்மைகள்
எவருக்குமே தெரியாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக