ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

கள்ளியா கடவுளா

கள்ளியே நீ கருவை சுமக்காமலே  தாயாய் ஜனித்தாயோ!
பெண் சிசுவுக்கு பாலூட்ட.......
கருவை சுமந்த தாய் வெறுத்த சிசுவை
   அறவனைத்து பாலூட்ட....
காலனின் கரங்களை தழுவினாயோ
கடலில் நீர் வற்றினாலும் கள்ளியே
 உன்னிடம் பால் வற்றாதோ!
எத்தனை பெறிய பொறுப்பு உனக்கு
இவ்வுலகில் ஜனிக்கும் சில பெண்
 சிசுவுக்கு நீ தானே பாலூட்டி வழியனுப்புகிறாய்
பெண் சிசுவின் இதயத்தை வெடிக்கச்
 செய்யும் உனக்கு இரக்கமில்லையோ!
போதும் நீ பாலூட்டியது இதோ என் வேண்டுகோள்
போதும் நீ பெண் சிசுக்களை பலி வாங்கியது
இனியும் உனக்கு தாரை வார்க்க தயாரில்லை
 கடவுளே எனக்கு ஓரு வரம் தாராய
பெற்றவள் மனதில் ஈரம் கொட!
கள்ளியினத்தை அழித்து விடு.....
நெஞ்சினை நிறைக்கும் நெல்மணியே
பெண் சிசுவின் பிஞ்சு நெஞ்சினை
  தான் குத்தி கிழிக்கலாமோ
போதும் நீ கிழித்தது நிறுத்திக் கொள்
இனி பெண் குழந்தைகள் வாழட்டும!
     பெண் தெய்வங்களாக....கள்ளியினம் அழியட்டும்!!
  இன்றைய பாடல் லிங்க்
தாஜ் மஹால் தேவையில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக