ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

கள்ளியா கடவுளா

கள்ளியே நீ கருவை சுமக்காமலே  தாயாய் ஜனித்தாயோ!
பெண் சிசுவுக்கு பாலூட்ட.......
கருவை சுமந்த தாய் வெறுத்த சிசுவை
   அறவனைத்து பாலூட்ட....
காலனின் கரங்களை தழுவினாயோ
கடலில் நீர் வற்றினாலும் கள்ளியே
 உன்னிடம் பால் வற்றாதோ!
எத்தனை பெறிய பொறுப்பு உனக்கு
இவ்வுலகில் ஜனிக்கும் சில பெண்
 சிசுவுக்கு நீ தானே பாலூட்டி வழியனுப்புகிறாய்
பெண் சிசுவின் இதயத்தை வெடிக்கச்
 செய்யும் உனக்கு இரக்கமில்லையோ!
போதும் நீ பாலூட்டியது இதோ என் வேண்டுகோள்
போதும் நீ பெண் சிசுக்களை பலி வாங்கியது
இனியும் உனக்கு தாரை வார்க்க தயாரில்லை
 கடவுளே எனக்கு ஓரு வரம் தாராய
பெற்றவள் மனதில் ஈரம் கொட!
கள்ளியினத்தை அழித்து விடு.....
நெஞ்சினை நிறைக்கும் நெல்மணியே
பெண் சிசுவின் பிஞ்சு நெஞ்சினை
  தான் குத்தி கிழிக்கலாமோ
போதும் நீ கிழித்தது நிறுத்திக் கொள்
இனி பெண் குழந்தைகள் வாழட்டும!
     பெண் தெய்வங்களாக....கள்ளியினம் அழியட்டும்!!
  இன்றைய பாடல் லிங்க்
தாஜ் மஹால் தேவையில்லை

சனி, 18 செப்டம்பர், 2010

காதலியின் கல்லறை


பனிக்காற்று வீசும் மண் முகடு ஓன்றில்
சிறிதாய் தோண்டப்பட்ட மண் புதைகுழியினுள்
என் மனம் மகிழும் வண்ணத்தில்
என் கணவுகளை காணல்நீராக்கிவிட்டு
பவ்யமாய் உறங்குகிறது
என் விரல் மீட்டாத வீனை


    

திங்கள், 6 செப்டம்பர், 2010

mp3 songs download

எனக்கு பிடித்த பாடல்கள் இனி உங்களுக்கும்
 மின்னலே நீ
புதுவெள்ளை மழை
என் காதலே
அஞ்சலி அஞ்சலி
செந்தமிழ்
வெண்ணிலாவின்

இன்றைய புகைபடம்
download
எனக்கு பிடித்த பாடல்கள்
download

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

உறவாய் நீ

இன்முகமாய் கிடைத்த தாலிக்கொடி உறவு
    அன்பும் அறவணைப்பும நிறைந்த
                         அற்புத உலகம்
படிப்படியாய் சுமைகளை சுமந்த பின்
 அற்புதமாய் இறைவன் தந்த வரம்
  அழகிய சிசுவின் குடியேற்றம் கருவறையில்
ரசித்து ரசித்து சுமந்த அழகி. உறவு
 என் கணவுகள் நிஜமாய் என் கைகளில்
 அந்த ஓருகனம் உலகமே தன்னுடையது
. போல் ஓரு உணர்வு
 தாய் என்ற உன்னதத்தை தந்த
            அழகு தெய்வம் நீ
அன்று அவனுடன் சேர்ந்து நானும் பிறந்தேன்
  இன்று அவனுடன் சேர்ந்து நானும் வளர்கிறேன்
 செல்லமே உன்னுடைய ஓவ்வொரு
           அசைவுகளுக்கும் நான் உனது
                                                                            முதல் ரசிகை